பட்டிப்பொங்கல் நாளன்று வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து இறைச்சிக்கடைகளையும் மூடுமாறு தனிப்பட்ட பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் ஐங்கரநேசனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவிக்கையில்,
தூய பசும்பாலையும் இரசாயன தீங்கில்லாத இயற்கை பசளையையும் உழவுத் தொழிலுக்கு கைகொடுப்பதுமான கால்நடைகளை, அவற்றிற்கு விழா எடுக்கும் நாளில் இறைச்சிக்காக கொல்வது முரணான செயற்பாடாக உள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே ஆண்டுதோறும் பட்டிப்பொங்கல் நாளன்று வடக்கு மாகாணத்திற்குட்பட்ட அனைத்து இறைச்சிக்கடைகளும் மூடப்படவேண்டுமென பிரேரனை முன்வைக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களதும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.