கிழக்கு மாகாணத்தில் பருவ மழை பொய்த்ததால், பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். நெற்பயிர்களுக்கு உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி நீர் இறைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பல பகுதிகளிலும் பெரும்போக வேளாண்மைச் செய்யை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் மேட்டு நிலங்களிலும் நிலக்கடலை, சோளன், பயிற்றை என்று உப உணவுப் பயிரினங்களும் செய்கை செய்யப்பட்டுள்ளன.
வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலமாக இருந்தாலும் நெல் விதைத்த காலத்தில் மழை வீழ்ச்சி கிடைத்துள்ள போதிலும், தற்போது பெரும்பாலான நெல்வயல்கள் விடலைப் பருவத்தில் காணப்படுகின்றன.
வேளாண்மைக்கு இந்தப் பருவத்தில் நீரில்லாமல் போனால் நெற்பயிர்கள் கருகிப்போகும்.
இந்த நிலையில் சிறிய குளங்களிலும், வாய்க்கால்களிலும் தேங்கிக் காணப்படும் நீரை விவசாயிகள் உழவு இயந்திரங்கள் மூலமும், நீர் பம்பிகள் மூலமும், வயல்களுக்குப் நீர் பாய்ச்சி வருகின்றார்கள்.