ஊழல் மோசடிகளுக்கெதிராகச் செயற்படும்போது தாம் எந்த தெருக்கடி வந்தாலும் அதற்கு முகம்கொடுக்கத்தயார் எனத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளால் இந்த நாட்டைக் கட்டியெழுப்பமுடியாதுள்ளது.
மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அடுத்தவாரம் நியமிக்கப்படும். எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் விமான நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக ஏற்கனவே ஜனாதிபதி அறிவித்திருந்தார்.